Wednesday, May 23, 2012

ஆசை மயக்கம்


ஆடிய அற்புத விளையாட்டில்
பாடிய உன்னத ரசனையில்
மயங்கிய இருவரும்
தங்களை மறந்திருப்பர் சிலமணிகள்
பிரியும் தருவாயில் இருவர் எண்ணமும்
என்னருகே நீயிருந்தால்.
காலத்தின் ஓட்டத்தில் பிரிந்த
இருவர் உள்ளமோ
பிரபஞ்சத்தைத் தாண்டிய சிந்தனையில்
எனக்கு நீ உனக்கு நான் என்னும்
நிறைவேறா ஆசையில்...

காதல்

 

                                                                        மழையும் மண்ணும் இணைந்த
                                                                        வேரும் மண்ணும் இணைந்த
உடலும் உயிரும் போன்ற
கவிஞனும் கவிதையும் போன்ற
ஆண் என்ற உடலும்
பெண் என்ற உயிரும்
பார்த்த பார்வையில் உருவாகும்
ஒரு புதிய சமூகம்!!