ஆடிய அற்புத விளையாட்டில்
பாடிய உன்னத ரசனையில்
மயங்கிய இருவரும்
தங்களை மறந்திருப்பர் சிலமணிகள்
பிரியும் தருவாயில் இருவர் எண்ணமும்
என்னருகே நீயிருந்தால்.
காலத்தின் ஓட்டத்தில் பிரிந்த
இருவர் உள்ளமோ
பிரபஞ்சத்தைத் தாண்டிய சிந்தனையில்
எனக்கு நீ உனக்கு நான் என்னும்
நிறைவேறா ஆசையில்...